பங்குச் சந்தைகளில் சரிவு

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (12:15 IST)
இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக சரிந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 99 புள்ளிகள் குறைந்து 15,632.71 புள்ளிகளாகக் குறைந்தது.

பிறகு வர்த்தகம் உயர்ந்ததால் 15,719 புள்ளிகளுக்கு உயர்ந்தது.

தேசப் பங்குச் சந்தையிலும் சரிவு காணப்பட்டது. அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி, எச்டிஎப்சி வங்கி, கிராசிம்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் குறைந்துள்ளது.

ஐடிசி,ஹிந்துஸ்தான் லீவர், ஓன்ஜிசி, என்டிபிசி பங்குகள் மட்டுமே குறையாமல் உள்ளன.
(பி.டி.ஐ - செய்தி பிரிவு)

வெப்துனியாவைப் படிக்கவும்