உலோகப் பங்குகள் 4% உயர்வு

புதன், 7 ஜனவரி 2009 (18:34 IST)
இன்று காலை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆ‌கிய உலோகப் பங்குகளின் விலை 3.7 விழுக்காடு வரை உயர்ந்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுகைகளை அடுத்து உலோகப் பொருட்களை வாங்குவதற்கான நிதியும், வணிகர்களும் பெருமளவில் திரும்ப வந்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டதென வர்த்தகச் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்