ரூபாய் மதிப்பு 27 பைசா சரிவு

புதன், 7 ஜனவரி 2009 (13:30 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.42 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 27 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.69 பைசா.

நேற்று ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்வதால் அதிக அளவு டாலர் இருக்கும். எனவே ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் டாலருக்கு நிகரான மற்ற ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்தது. இதனால் அதிக அளவு ரூபாய் மதிப்பு அதிகரித்து, டாலர் மதிப்பு குறையாது என்று தெரிகிறது.

இன்று வர்த்தகம் நடைபெறும் போது 1 டாலரின் விலை ரூ.48.57 முதல் ரூ.48.51 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.61 பைசா (நேற்று ரூ.47.33 பைசா).
1 யூரோ மதிப்பு ரூ.65.72 (ரூ.66.69)
100 யென் மதிப்பு ரூ.51.90 (ரூ.52.64)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.72.51 (ரூ.73.92).

வெப்துனியாவைப் படிக்கவும்