ரூபாய் மதிப்பு 13 பைசா உயர்வு

புதன், 31 டிசம்பர் 2008 (14:45 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.34-48.35 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 13 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.47 பைசா.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் ஏற்றம் காணப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலர் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48,31 முதல் ரூ.48.52 என்ற அளவில் இருந்தது.

நேற்று பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.45 பைச
1 யூரோ மதிப்பு ரூ.68.22
100 யென் மதிப்பு ரூ.53.68
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.01.

வெப்துனியாவைப் படிக்கவும்