ரூபாய் மதிப்பு 35 பைசா சரிவு

புதன், 24 டிசம்பர் 2008 (14:00 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா குறைந்தது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 181 பைசா (3.86%) குறைந்துள்ளது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.13 ஆக அதிகரித்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 35 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.76-48.78 பைசா.

அத்துடன் இன்றும் ஆசிய நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. பொதுத்துறை வங்கிகளும், இறக்குமதியாளர்களும் அதிக அளவு டாலரை வாங்குவதால் டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலரின் விலை ரூ.48.86 முதல் ரூ.49.18 என்ற அளவில் இருந்து.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.99 பைச
1 யூரோ மதிப்பு ரூ.68.44
100 யென் மதிப்பு ரூ.54.21
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.72.49.

வெப்துனியாவைப் படிக்கவும்