ரூபாய் மதிப்பு 29 பைசா உயர்வு

வியாழன், 18 டிசம்பர் 2008 (14:08 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.35 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 29 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.47.64 பைசா.

பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.47.30 முதல் 47.43 என்ற அளவில் விற்பனை ஆனது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.28 பைச
1 யூரோ மதிப்பு ரூ.68.22
100 யென் மதிப்பு ரூ.53.68
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.73.43

வெப்துனியாவைப் படிக்கவும்