மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

வங்கிகள், எஃகு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வணிகத்தில் 66 புள்ளிகள் உயர்ந்து 14,464 புள்ளிகளை எட்டியுள்ளது!

கடந்த 2 நாட்களில் 175 புள்ளிகள் அதிகரித்துள்ள மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தேச பங்குச் சந்தை குறியீடு 18 புள்ளிகள் உயர்ந்து 4,274 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

ஆசிய சந்தைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீடு அதிகரித்து வருவதாக பங்குச் சந்தை தரகர்கள் கூறியுள்ளனர்.

லார்சன் அண்ட் டூப்ரோ, பெல், டாட்டா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. ஆகியவற்றின் பங்குகள் ஏறுமுகமாக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்