சென்னையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (09:39 IST)
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மழை பெய்து வருவதால் பூக்கள் செடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறது. இதனால் பூக்கள் நீரில் மூழ்கி அழுகி விடுகின்றன. இதன் காரணமாக கோயம்பேட்டிற்கு வரும் பூக்கள் வரத்தும் கனிசமாக குறைந்துள்ளது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
நேற்று கிலோ ரூ. 350க்கு விற்ற கனகாமரம் இன்று ரூ.50 அதிகரித்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் முல்லை, ஜாதி மல்லி, ரோஸ் உள்பட பல்வேறு பூக்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு இரண்டு நாட்களில் குறைந்து விடும் வியாபாரிகள் கூறினார்.
காய்கறிகளை பொறுத்தவரை இன்று விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. பழங்கள் சற்று உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.04
கேரட் ரூ.15
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.12
நூக்கோல் ரூ.12
முள்ளங்கி ரூ.12
வெள்ளரிக்காய் ரூ.06
பீன்ஸ் ரூ.15
கத்திரிக்காய் ரூ.06
அவரைக்காய் ரூ.16
புடலங்காய் ரூ.08
வெண்டைக்காய் ரூ.10
மிளகாய் ரூ.08
குடை மிளகாய் ரூ.35
முருங்கக்காய் ரூ.10
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.08
சேனைக் கிழங்கு ரூ.12
சோம்பு ரூ.14
உருளைக்கிழங்கு ரூ.10
கோவக்காய் ரூ.08
சுரக்காய் ரூ.06
நாட்டு தக்காளி ரூ.14
பெங்களூர் தக்காளி ரூ.13
பூசணி ரூ.04
நாசிக் வெங்காயம் ரூ.10
சாம்பார் வெங்காயம் ரூ.15
பாகற்காய் ரூ.13
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.04
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.65
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.90
நாவல் ஆரஞ்சு ரூ.72
சாத்துக்குடி ரூ.14
கொய்யா ரூ.20
கருப்பு திராட்சை ரூ.22
பச்சை திராட்சை ரூ.50
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.70
செவ்வாழைப்பழம் ரூ.32
கற்பூரவள்ளி ரூ.17
ரஸ்தாளி ரூ.22
பச்சை வாழைப்பழம் ரூ.12
பப்பாளி ரூ.09
சப்போட்டா ரூ.40
கிரினி பழம் ரூ.11
தர்பூசணி ரூ.06.50
நேந்திரம் பழம் ரூ.32
அத்திப்பழம் ரூ.36
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.300
ஜாதி மல்லி ரூ.250
முல்லை ரூ.200
கனகாமரம் ரூ.400
சாம்பந்தி ரூ.130
சம்பங்கி ரூ.100
100 ரோஸ் ரூ.40
குயின் ரோஸ் ரூ.40
கோழி கொண்டை ரூ.60
வாடா மல்லி ரூ.60
செண்டு பூ ரூ.60
அரளி பூ ரூ.60