பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (13:19 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் சென்ற வாரம் நிலவிய சூழ்நிலையில் இருந்து, இன்று மாற்றம் தெரிந்தது.

காலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தன. முதல் அரை மணிநேரத்திற்ககு பின் பங்குகளின் விலை அதிகரித்த தொடங்கியது. இதனைல் 374 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், மதியம் பனிரெண்டரை மணியளவில் சென்செக்ஸ் 17,527 புள்ளிகளாக இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 32.78 புள்ளிகள் குறைவு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52445.65 புள்ளிகளாக இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 29.65 புள்ளிகள் அதிகம்.

காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் சரிந்ததற்கு காரணம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்து விட்டு வேறு பங்குகள் வாங்கியதே என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.

மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட அதிகரித்தது. இதே போல் பி.எஸ்.இ 500 பிரிவு குறியீட்டு எண் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட உயர்ந்தது. ி.எஸ்.இ 100, 200 பிரிவு குறியீட்டு எண் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தும், குறைந்தும் நிலையில்லாமல் உள்ளன. அதே போல் மும்பை பங்குச் சந்தையிலும் நிலையில்லமல் உள்ளது. இதற்கு காரணம் பங்குகளின் விலையில் அதிக மாற்றம் காணப்படுவதே.


ஏ.ி.ி, ஏ.ி.எல், ஹெச்.ி.எப்.சி வங்கி, ஹிண்டால்கோ, எல் அண்ட் டி, ஒ.என்,ி.ி, எஸ்.ி.ஐ, ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி ஐ.ி.சி மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் எனர்ஜி, பங்குகளின் விலைகள் அதிகரித்தன.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பஜாஜ் ஆட்டோ, பர்திஏர்டெல், ி.ஹெச்.இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, கிராசிம், ஹெச்.ி.எப்.ி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ், மாருதி, சத்யம், டாடா மோட்டார், டாடா ஸ்டீல், ி.ி.எஸ், விப்ரோ ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் குறைந்தன.


வெப்துனியாவைப் படிக்கவும்