குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:54 IST)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் நாகைக்கு தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.

மழை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், தமிழ்.வெப்துனியா.காமிற்கு அனுப்பிய ஆய்வு முடிவுப்படி, தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மழையானது 26ம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்