ராணுவ எழுத்தர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியீடு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:05 IST)
ராணுவ எழுத்தர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ராணுவ எழுத்தர் பிரிவு (சி.இ.இ.) பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ தலைமை ஆள் சேர்ப்பு அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
பொதுத் தேர்வு எழுதிய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் நேரில் வந்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.