பொறியியல் கல்லூரிகளுக்கு செப். 1-ல் அடிக்கல்!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளின் கட்டிடங்களுக்கு வரும் 1-ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழககத்தின் கீழ் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு பொறியியல் கல்லூரிகளிலும் வரும் 8-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளன.

இக்கல்லூரிகளின் புதிய கட்டிடங்களுக்கு, வரும் 1-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டவிருப்பதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே விழாவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது. மேலும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளையும் இவ்விழாவில் முதலமைச்சர் கருணாநிதி வழங்குவார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்