10ம் வகுப்பு : 29 முதல் ஹால்டிக்கெட்

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (11:16 IST)
10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத அனுமதி சான்று வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் ஒ.எஸ்.எல்.சி. தேர்வில் 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜுலை மாதம் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் 29-ந்தேதி முதல் ஜுலை 2-ந் தேதி வரை அனுமதி சான்று வழங்கப்பட உள்ளது.

2007-ல் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த பள்ளியிலேயே அனுமதி சான்றை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுமதி சான்றவழங்கும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்

மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10-வது வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜுலை மாதம் 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான அனுமதி சான்று 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள் மண்டல துணைமையங்கள் அறிவிக்கும் அனுமதி சான்றவழங்கும் மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்