எஸ்ஆர்எம் நிறுவனத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (11:34 IST)
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடந்த இதன் துவக்க விழாவில் ஆங்கிலப் பயிற்சியாளர் ஆல்பர்ட் பி ராயன், ஆங்கிலப் பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்தார்.

இது குறித்து அதன் தலைவர் லட்சுமி நரசிம்மன் கூறுகையில், ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியும், அனைத்து நுழைவுத் தேர்வு போட்டிகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 31 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் 124 மையங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்