தழும்புகள், முகத்திலுள்ள கரும் புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.
சோற்றுக்கற்றாழை செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை தூண்டும். ஏப்பம், பசியின்மை, தண்டுவலி, மலசிக்கல், நரம்புசூடு போன்றவற்றை சரி செய்யும். தீக்காயங்களுக்கு உடனடி தீர்வு கற்றாழை சாறு தான். கற்றாழை சாறை தீக்காயங்களில் லேசாக தேய்த்து வர விரைவில் தீக்காயங்கள் ஆறும்.
இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. இதனை இரவு நேரங்களில் உடலில் தேய்த்து நல்ல மசாஜ் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.