கிரண்பேடியுடன் இணைந்து செயல்படுவோம் - நாராயணசாமி

செவ்வாய், 21 ஜூன் 2016 (21:20 IST)
கிரண்பேடியுடன் இணைந்து செயல்படுவோம் என புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.
 

 
சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதிதேவை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரியை முன்வைத்து மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். மாநில வளர்ச்சிக்காக புதுவை கவர்னர் கிரண்பேடியுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்