இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய விராட் ஹோலி, "இது வெளிப்படையானது. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நாங்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவும் இல்லை. நாங்கள் எதையும் மறைப்பதற்கு விரும்பவுமில்லை. ஆனால், இந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் போதும், இதை விவாதப்பொருளாக ஆக்கும் போதும், நாங்கள் இருவருமே தனிப்பட்ட முறையில் இதை சரியானது என்று நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், " நீங்கள் எங்களை ஒன்றாகப் பார்க்க நேரிட்டாலும் சரி, பொதுமக்களும் சரி 'இது உண்மைதானா?' என்று கேட்கின்றனர். இது பொதுஅறிவு சம்பந்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், குத்துச் சண்டை வீராங்கணை சரிதா தேவி பற்றிக் குறிப்பிடுகையில், "இந்த சமபவத்தைப் பற்றி எனக்குத் தெரியும். விளையாட்டு வீரருக்கு அவர்களுடைய சங்கத்தினுடைய ஆதரவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.