சுதந்திர தினவிழா : தேசிய சின்னங்கள் முன்பு நோ செல்பி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (19:24 IST)
வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி, இந்தியா முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாட இருப்பதல், இந்தியாவில் உள்ள தேசிய நினைவு சின்னங்களின் முன்பு செல்பி எடுக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.


 

 
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதை சீர்குலைக்க வைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நினைவிடங்களிலும் வருகிற 12ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்பி எடுக்க தடை விதித்து சுற்றுலாத்துறை, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அடுத்த கட்டுரையில்