பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்கொடுமைக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன், சிரித்தபடி புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக விமர்சிக்கப்பட்ட இந்திய பெண் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தான் தவறு ஏதும் செய்யவில்லை. அந்த பெண்ணிடம் கேட்டுகொண்ட பிறகே புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக, பதவியை துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜஸ்தான் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சோம்யா குர்ஜார் தெரிவித்திருக்கிறார்.