எங்களின் சீர்மிகு பிரதமர் அவர்களே
நாடாளுமன்ற தேர்தலின் போது வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம் என்றீர்கள். பிறகு ஊழல் இல்லாத இந்தியா என்றீர்கள். தேர்தலுக்கு பின் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றீர்கள். தற்போது உங்களின் சாத்விகள் முஸ்லீம்கள் இல்லாத இந்தியா என்கிறார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து மிஷனரிகள் இல்லாத இந்தியா, கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா, திராவிடர்கள் இல்லாத இந்தியா என்றும் கூட சொல்வார்கள். அப்போதும் நீங்கள் வாய் மூடி தான் இருப்பீர்கள். காந்தி இல்லாத இந்தியா, எப்படி சாத்தியம் இல்லையோ, அதுப்போல முஸ்லீம்கள், கம்யூனிஸ்ட்கள், திராவிடர்கள் மற்றும் கிறித்துவர்கள் இல்லாத இந்தியா சாத்தியமே இல்லை. நீங்கள் தோற்கடிக்கவே முடியாதவர் அல்ல என்பதை பிஹார் டெல்லிமக்கள் உறுதி செய்து உள்ளன. ஆகவே சாமானியன் சொல்கிறேன் காந்தியம் பேசுங்கள், காந்தியம் செய்யுங்கள் பிரதமர் அவர்களே.