மத்திய பட்ஜெட் உரை: பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது
2014 -2015 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தற்போதைய பொருளாதார சூழலில் பெரிய அளவில் பட்ஜெட்டை எதிர்பார்க்க வேண்டாம். வருங்கால தலைமுறையினருக்கு கடனை மட்டும் விட்டுச்செல்ல முடியாது.
பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழியை ஆலோசிக்க வேண்டியுள்ளது. 8 சதவீத வளர்ச்சி இலக்கு. என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.