குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிஸ்பா காத்ரி என்பவர் மும்பை வாதாலா பகுதியில் உள்ள சங்வி ஹைட்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க நினைத்து புரோக்கரை அணுகினார். அவரும் ஒரு வீட்டைக் காட்டியுள்ளார். வீடு பிடித்ததால் அந்த வீட்டையே வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இளம்பெண் மிஸ்பா காத்ரி கூறுகையில், " நான் முஸ்லீம் என்பதால் வீடு வாடகைக்குக் கிடைக்காது என்று புரோக்கர் என்னிடம் தெரிவித்தார். மேலும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அதற்கு புரோக்கரோ, அபார்ட்மென்ட் நிர்வாகமோ பொறுப்பில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு புரோக்கர் வலியுறுத்தினார்.