ஏப்ரல் 10ஆம் தேதி இளம் பெண் ஒருவரின் சடலத்தை கண்டுபிடித்த மும்பை காவல்துறை இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தபோது அசிப் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பது தெரிந்தது. பின்னர் அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்ததில் மனைவியை கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அசிப் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.