பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். அதனை வங்கிகளில் செலுத்தி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வங்கி வாசலில் பொதுமக்கள் தவியாய் வைத்து நெடுநேரம் காத்திருந்து தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மற்றி வருகின்றனர் சாமானியர்கள். ஆனால் எந்த அமைச்சர்களும் வங்கிகளில் வந்து வரிசையில் நின்று பணத்தை மாற்றவில்லை. இந்நிலையில் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கங்களை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.