கிட்னி கடத்தும் கும்பல் கைது

வெள்ளி, 3 ஜூன் 2016 (21:56 IST)
டெல்லியில் கிட்னி கடத்தும் திருடர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
டில்லியின் தெற்கு பகுதியில் கிட்னி கடத்தும், 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களில் அப்போலோ மருத்துவமனை ஊழியர் ஒருவரும் அடங்குவர்.

இதனையடுத்து, கிட்னி கடத்தும் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை எனக் கூறியுள்ள அப்போலோ மருத்துவமனை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனக்கூறியுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் இடைத்தரகர்கள் எனவும், டில்லியில் 4 கிட்னிகளை விற்றுள்ளதும், இதற்காக வட இந்தியாவில் உள்ள கிராமத்திலிருந்து ஏழை பெண் இருவர் உட்பட 3 பேரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்