தமிழக அரசு எப்பொழுதும் உண்மையை ஒப்புகொள்வதில்லை: சித்தராமைய்யா!!

செவ்வாய், 4 ஜூலை 2017 (11:55 IST)
தமிழகத்திற்கு சமீபத்தில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. தமிழகத்திற்கு ஏன் தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதிலளித்துள்ளார்.


 
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஆனாலும் அணைகள் நிரம்பவில்லை என்றாலும் சில நாள்களில்  செயற்கை மழை பெய்விக்கப்படும். இதற்கான பணிகளையும் கர்நாடக அரசு துவங்கியுள்ளது.
 
கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு எப்போதும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை. மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துதான் வருகிறது என சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்