இதனால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, வரும் 14 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார்.
அப்போது, தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மோடிக்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் தெரிவிப்பார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.