ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெயின் துறவிகள் வயதான பிறகு உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தல் (சந்தாரா) பழக்கத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கும்போது அவர்கள் உணவு, நீர் எதுவும் சாப்பிடாமல் உயிர் விடுவார்கள்.
இது பற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல் பழக்கத்துக்கு தடை விதித்தது. மேலும் உண்ணாநோன்பு இருந்து உயிர் விடுவது தற்கொலை செய்வதற்கு சமமானதாகும். இதனால் உண்ணாநோன்பு இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.