நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 4 வேட்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, பாரதீய ஜனதா கட்சியின் மதுரா தொகுதி வேட்பாளர் ஹேமமாலினி மற்றும் ராஷ்டிரிய லோக் தள் கட்சி வேட்பாளர் ஜெயந்த் சவுதாரி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான செலவுகளை மறைத்து, குறைவான தொகையை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.