ஆனால், ரகுராம்ராஜன் அதே பதவியில் நீடித்தார். இதற்கு பல எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பல குற்றாசாட்டுகளை கூறியிருந்தார். அவரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், இது ஊடகங்களில் விவாதிக்கும் விவகாரம் அல்ல என்று மோடி கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம்ராஜன் “இரண்டாவது முறையாக, நான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.