சம்பவத்தன்று, அந்த நாய் தீடிரென அவரை அடிக்க வந்துள்ளது. இதையடுத்து நாயை விட்டு விட்டு அவர் ஓடியுள்ளார். அங்கும் இங்கும் ஓடிய அந்த நாய், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு ஓடி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்களை துரத்தியுள்ளது.
அதில், இருவர் மட்டும் ஒரு அறைக்குள் புகுந்து தப்பிவிட்டனர். மற்ற மூவரும், எங்கே தங்களை நாய் கடித்து விடுமோ என்று அஞ்சி, மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து உள்ளனர். அதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.