மாணவர் தற்கொலை செய்துகொண்ட இடத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் அரசியல் ஆதாயம் தேடவே சென்றுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த இழிவான அரசியலை காங்கிரஸ் கைவிட வேண்டும் என கூறிய அவர்கள், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என கூறப்படுவதை நிராகரித்தனர்.
மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல் சம்பவத்தில் விதிப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அவர்கள் முறையான பதில் அனுப்பாததால், குறிப்பிட்ட கால இடைவேளையில் 4 முறை நினைவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதான். பல்கலைக்கழகத்துக்கு எவ்வித நெருக்கடியும் அளிக்கவில்லை என மத்திய மனிதவளத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கோயல் கூறினார்.