பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

திங்கள், 18 ஜனவரி 2016 (15:20 IST)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.


 

 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை 4 வாரங்கள் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்