ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாகாலாந்தில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலை அடுத்து அங்கு சென்று கமாண்டோக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் அதில் இருந்து 8 பேரில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், அதன் பிறகே அது தவறு என்று தெரிய வந்துள்ளது.