தெலங்கானாவில் உள்ள ஆதிலாபாத் மாவட்டம், பைம்சா பகுதியைச் சேர்ந்தவர் சையத் கான். நேற்று அவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல், வீட்டில் இருந்த சையத் கான் (55) , யூனஸ் கான் (35), அக்ரம் பீ (60), வஹீதா பேகம் (38), ஆயிஷா (12) ஆகிய 5 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.