நாடு முழுவதும், தேசிய மனநல கழகம் மற்றும் நரம்பியல் துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 13.7 சதவீதம், அதாவது 15 கோடி இந்தியர்கள் பல்வேறு விதமான மனநல பாதிப்புக்களால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வேகமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் மனநல பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பொருளாதார காரணங்களால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையே அதிகம்.