மணிப்பூரில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாயினர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள சங்காக்பம் என்ற சந்தைப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அங்குள்ள ஒரு கடையில் இந்த குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் உட்பட 5 பேர் உடல் சிதறி பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.