கண் ‌பா‌ர்வை‌க்கு மு‌ட்டை சா‌ப்‌பிடலா‌ம்

வியாழன், 11 ஜூன் 2009 (11:59 IST)
க‌ண் பா‌ர்வை‌க்கு ஏ‌ற்றது எ‌ன்றா‌ல் எ‌ல்லோரு‌ம் முத‌லி‌ல் சொ‌ல்வது கேர‌ட்டை‌த்தா‌ன். இ‌ப்போது அத‌ற்கு‌ம் போ‌ட்டி வ‌ந்து‌வி‌ட்டது. கேர‌ட்டி‌ற்கு ஈடாக மு‌ட்டையு‌ம் பயன‌ளி‌க்கு‌ம் எ‌ன்‌கிறது பு‌திய ஆ‌ய்வு.

கேரட்டை அப்படியே சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம்தான். இந்த விஷயத்தில் கேரட்டைக் காட்டிலும் முட்டைதான் ‌சிற‌ந்தது என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்.

ஒருவரது கண் பார்வை பாதிக்கப்படாமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். இந்த சத்தானது கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இருக்கிறது.

காய்கறிகளில் இருந்து கிடைப்பதைக்காட்டிலும், முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்தை நமது உடல் உடனே ஏற்றுக்கொள்கிறது. இதனால் பலனும் உடனடியாக கிடைக்கிறது. அதற்காக தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

உங்களுக்கு பார்வை குறைபாடு என்றால், இ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்தே மு‌ட்டை சா‌ப்‌பிட‌த் துவ‌ங்கு‌‌ங்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்