த‌மிழக ப‌ட்ஜெ‌ட்டி‌ன் ‌சிற‌ப்ப‌‌ம்ச‌ம்!

வியாழன், 20 மார்ச் 2008 (15:16 IST)
தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான ‌நி‌‌தி ‌நிலஅ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ரஅ‌ன்பழக‌னஇ‌ன்றச‌ட்ட‌பபேரவை‌யி‌லதாக்கலசெய்தா‌ர். அத‌ன் ‌சிற‌ப்ப‌‌ம்ச‌‌மவருமாறு:

* பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாமுடிவு.

* தைத் திங்கள் முதல் நாளை தமி‌ழ்‌ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.

* சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்

* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.

* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

* பன், ரஸ்க், சோயா எண்ணெ‌ண், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு - மற்றும் பல பொருட் களுக்கு வரி குறைப்பு

* பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 ‌விழு‌க்கா‌‌ட்டை அரசே வழங்கும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.

* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்

* திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்

* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவா‌ய் வட்டங்கள்

* திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.

* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் - ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

* ரூ.6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றித‌ழ் தேவையில்லை.

* சிறு வணிகம் செ‌ய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன்.

* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.

* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.5 கோடி அறவே தள்ளுபடி.

* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ.16 கோடி முழுவதும் தள்ளுபடி

* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவா‌ய், நடுத்தர வருவா‌ய், உயர் வருவா‌ய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி
செ‌ய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

* விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

* புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்

* கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

* நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

* அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வா‌ய்ப்பு பயிற்சி.

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செ‌ய்ய நீதிப‌தி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்

* விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.

* கழிவு நீர்க் குழா‌ய்களில் தூ‌ய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை

* கழிவு நீர் குழா‌ய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

* 27 தமி‌ழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

* தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்தரிக்கும் “கையளவில் தமிழகம்” கவின் கலைக் கூட‌ம்

* சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ஒரு கோடி ரூபா‌ய் நிதி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம்.

* தமி‌ழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ- மாணவியர்களுக்கு கணினி பரிசு

* சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை

* எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூ.5 கோடி ஒதுக்கீடு

* 5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கஅரசு சான்றித‌ழ்கள், விண்ணப்பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

* மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையமஅமைக்கப்படும்

* குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

* குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.

* அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.

* விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சதவிகித மானியம்.

* இந்த ஆண்டிலிருந்து பயறுவகைகளை அரசே கொள்முதல் செ‌ய்யும்.

* ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - ரூ.10 கோடி சுழல்நிதியாக அரசு நிதியுதவி

* ரூ.150 கோடியில் கல்லணைக் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* ரூ.12 கோடியில் காளிங்கராயன் கால்வா‌ய் மேம்பாட்டுத் திட்டம்.

* காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு -- வைகை - குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டம்.

* ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்.

* ரூ.550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணிகள் அமைக்கும் பெருந்திட்டம்.

* ரூ.12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* ரூ.211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூ.2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

* அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.

* ஓ‌ய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூ.50,000லிருந்து ரூபா‌ய் ஒரு இலட்சமாக உயர்வு.

* 10,000 உயர் கலப்பின கறவைமாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.

* அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.

* காவ‌ல்துறை ஆணைய‌த்‌தி‌ன் பரிந்துரைகள் ஆ‌ய்வு செ‌ய்யப்பட்டு, ஆவன செ‌ய்யப்படும்

* ரூ.100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

* புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.75 கோடி ஒதுக்கீடு

* 100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* அனைவருக்கும் இடைநிலைக் கல்வி - புதிய திட்டம் - ரூ.200 கோடி ஒதுக்கீடு

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆ‌ய்வகங்கள் -ஆ‌‌ய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்

* 500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆ‌ய்வகங்கள்

* 100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வசதிகள்

* 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 2,200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் - ரூ.71 கோடி ஒதுக்கீடு

* அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்

* அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்

* அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே கருவிகள்

* வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள்

* தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை

* 227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நியமனம்

* இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம்.

* தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செ‌ய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

* ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூ.82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்

* கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்

* 1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங்களாக மாற்றப்படும்.

* 90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு

* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

* இந்திரா வீட்டு வசதித் திட்டம் - கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூ.12,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு

* தமி‌ழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

* மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

* அய‌ல்நாட்டு வா‌ழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை

* மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு.

* ரூ.750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்

* 25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

* 1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி சுழல்நிதி.

* மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம்

* தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித் தொகை.

* காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.

* அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடு‌தி

* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 ‌விழு‌க்காடு வட்டி மானியம்.

* கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

* காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

* பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

* கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

* ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.

* 25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்டடங்கள்.

* 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.400 லிருந்து ரூ.450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.500 லிருந்து ரூ.550 ஆகவும் உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

* சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூ.40 கோடி கடன் உதவி.

* 350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.

* சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

* 25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்‌டி‌‌ன் மொ‌த்த வருவா‌ய் ரூ.51,505 கோடி

* 2006-07ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் மொ‌த்த செல‌வின‌ம் ரூ.51,421 கோடி

* கட‌ன், மு‌ன்பண‌ம், மூலதன‌ம் ம‌தி‌ப்பு ரூ.9,876 கோடி

* ப‌ற்றா‌க்குறை ரூ.9,792 கோடி

வெப்துனியாவைப் படிக்கவும்