முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

வெள்ளி, 27 ஜூலை 2012 (16:16 IST)
மழைக்காலமும், குளிர்காலமும் வரப்போகுது. (இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுங்கிறது வேற கதை. எப்பிடினாலும் மழை வரும், குளிரும் வரும்). இந்தமாதிரி சீதோஷ்ண நிலையில... தும்மல், மூக்கடைப்புல தொடங்கி தலைவலி, ஜலதோஷம், சளி எல்லாம் வந்து ஒருவழி பண்ணிரும். இதுல சிக்கி மீண்டு வர்றவங்க சிலபேரு. வேற சில பேர் என்னதான் சிகிச்சை எடுத்தாலும் விட்டேனா பாருனு அட்டை மாதிரி ஒட்டிக்கிடும். இதுக்கெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்குறதோட கைவைத்தியங்கள் செய்யுறதுனால பிரச்சினை இல்லாம வாழ்க்கையை ஓட்டலாம். இங்க நா சொல்லப்போற வைத்தியங்கள் சில பேருக்கு பரிச்சயமானதா இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோங்க.

மழையில நனைஞ்சாலும், நனையாட்டாலும் குளிர்ச்சியான சூழல் நிலவும்போது பலபேர் நச், நச்சுனு தும்மல் போடுவாங்க. சைனஸ் பிரச்சினஉள்ளவங்க, அலர்ஜி உள்ளவங்களுக்கு இந்தமாதிரி தொந்தரவுகள் அதிகமா இருக்கும். குறிப்பா காலையில கணமுழிச்சதும் அவங்க போடுற தும்மல் மத்தவங்களை எரிச்சல் படுத்தும். இப்பிடி தும்மல் வந்தா தேங்காய்நாரை தீயில எரிச்சு அதுல வரக்கூடிய புகையை மூக்கால சுவாசிச்சா தும்மல் நின்னுரும். இதை அடிக்கடி செய்யக்கூடாதுங்குறதையும் இங்கே ஞாபகப்படுத்துறேன்.

நொச்சி இலையை தண்ணியில வேகவச்சி அதோட ஆவியமூக்கால சுவாசிக்கலாம். வேப்பிலையோட மஞ்சள்தூள் போட்டு கொதிக்வச்சும் ஆவி பிடிக்கலாம். இதை வேது பிடிக்கிறதுனும் சொல்வாங்க. இந்தமாதிரி செய்றதால தும்மல் மட்டுமில்லாம மூக்கடைப்பும், தலைவலியும்கூட சரியாகும். நொச்சி இலை, வேப்பிலை வேதுபிடிக்கிறதையும் அடிக்கடி செய்யக்கூடாது.

அடுத்ததா மூக்கடைப்பு உள்ளவங்க மிளகை தீயில சுட்டு அதோட புகையசுவாசிக்கலாம். மஞ்சள்துண்டை நல்லெண்ணையில நனைச்சி அதை தீயில எரிச்சி வர்ற புகையை சுவாசிச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும். மூக்கு ஒழுகுனாலும் சட்டுனு நின்னுரும். இந்தமாதிரி வைத்தியம் ஆபத்தில்லாதது, ஆனா ஒரு அளவோட செய்யும். பச்சக்குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுனா சாதிக்காயை தண்ணி விட்டு இழைச்சி ஒரு கரண்டியில போட்டு சூடாக்கி பொறுக்குற சூட்டுல மூக்கு மேல பத்து போட்டீங்கனா மூக்கொழுகல், மூக்கடைப்பு நிக்கும்.

அடுத்ததா ஜலதோஷம் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தா உடனே சூடா வெந்நீர் குடிச்சா நிவாரணம் கிடைக்கும். இல்லைனா மணத்தக்காளி சூப் போட்டு குடிச்சீங்கனா வந்த வழியை பார்த்து போயிரும். ஜலதோஷம் இருக்குறவங்களுக்கு தலையெல்லாம் வலிக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல சுக்கை தண்ணி விட்டு உரசி நெத்தியில பத்து போட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். காலையில இஞ்சி சாறு, டீயோட இஞ்சி சேர்த்து குடிக்கிறது, இஞ்சி துவையல், மத்தியான வேளையில சுக்கு குழம்பு, சுக்கு மல்லி காபி குடிக்கிறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும். தூதுவேளை துவையல், தூதுவேளை ரசம் நல்லது. கல்யாணமுருங்கை சாறு குடிக்கிறது, கல்யாணமுருங்கை வடை, ஓமவள்ளி & கற்பூரவள்ளி பஜ்ஜி சாப்பிடுறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும்.

மத்தியான சாப்பாட்டுல சின்ன வெங்காயம் - பூண்டு குழம்பு, பச்சையஉரிச்ச சின்ன வெங்காயத்தை சாப்பிடுறது, மிளகுப்பொடியை சுடுசோத்துல முதல் கவளத்தோட சேர்த்து சாப்பிடுறதெல்லாம் நல்லது. ஜலதோஷம் மட்டுமில்லாம சளி தொந்தரவுகளுக்கும் இதெல்லாம் நல்லது. இந்தமாதிரி நேரங்கள்ல சுடுதண்ணியில குளிக்கிறது, அதோட யூகலிப்டஸ் இலைகளைப்போட்டு குளிக்கிறது. நொச்சி இலைகளை கொதிக்க வச்சி குளிக்கிறதெல்லாம் நல்ல நிவாரணி. சளி பிடிச்சா தலைக்கு குளிக்கக்கூடாதுனு சொல்வாங்க. பிரச்சினை அதிகமா இருந்தா தவிர்க்கலாம். ஆனா இந்த இலைக்குளியல்ல நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்பிடி குளிச்சி முடிச்ச கையோட சாம்பிராணி புகை போடுங்க. இதை மற்ற சில மருத்துவத்தில் கூடாதுனு சொல்வாங்க. மூக்கால சாம்பிராணி புகையை உள்ளே இழுக்கக்கூடாது. தலை, காது பகுதியில சாம்பிராணி புகை காட்டணும். சாம்பிராணியோட ஓமம், மஞ்சள்தூள் சேர்த்துக்கலாம். குளிச்சி முடிச்ச கையோட மிளகை பொடியாக்கி மெல்லிசான துணியில போட்டு உச்சந்தலையில சூடு பறக்க தேச்சா ஜலதோஷம், சளி பிரச்சினையெல்லாம் சரியாகும்.

ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி மிளகு - பூண்டுப்பால் சாப்பிடுறது ரொம்ப நல்லது. முழு வெள்ளைப்பூண்டை உரிச்சி பால்ல வேக வச்சி அதோட மஞ்சள்தூள், மிளகு, பனங்கல்கண்டு சேர்த்து நல்ல கடைஞ்சி சாப்பிட்டீங்கனா சளியை விரட்டும். குழந்தைங்க, பெரியவங்க யாரானாலும் தேங்காய் எண்ணெய்ல சூடத்தை (கற்பூரம்) போட்டு சூடு பண்ணி நெஞ்சு பகுதியில தேய்க்கிறது, அரிசி, கோதுமைத் தவிடை வறுத்து துணியில முடிஞ்சு நெஞ்சு, விலா பகுதியில ஒத்தடம் போடுறதெல்லாம் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல சிகிச்சை. இன்னுமசொல்லலாம். இன்னொரு நாள்ல பார்ப்போமே! - தமிழ்குமரன், மூலிகஆராய்ச்சியாளர் (9551486617)

வெப்துனியாவைப் படிக்கவும்