சா‌ம்பா‌ர் வடாக‌ம்

புதன், 18 மார்ச் 2009 (17:08 IST)
சா‌ம்பா‌ர் வடாக‌ம் போட இதுதா‌ன் ச‌ரியான நேர‌ம்

தேவையான பொருட்கள

துவரம் பருப்பு - ஒரு கப்
கடலைப் பருப்பு - ஒரு கப்
மிளகாய் - 10
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

இரண்டு பருப்புகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு களைந்து எடுத்து மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து உரலில் இட்டு ரவை போல அரைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால், நைசாக அரைத்து விடாமல் சற்று கொரகொர அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள பருப்புடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

உருண்டைகளை வெய்யிலில் காய வைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

காய்கறிக்கு பதிலாக சாம்பாரில் இந்த வடகத்தைப் பயன்படுத்தலாம்.

வடகத்தை எண்ணெய்யில் பொரித்து சாம்பாரில் போட இன்னும் சுவை கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்