புதன், 3 பிப்ரவரி 2010 (17:14 IST)
தேவையான பொருட்கள்
புளி - சிறிது
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொள்ளு - கால் தேக்கரண்டி
து. பருப்பு - கால் தேக்கரண்டி
கா மிளகாய் - 3
மிளகு, சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
பெருங்காயம்
உப்பு
தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
செய்முறை
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருள்களை ஒன்றாக மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும்.
புளியைக் கரைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் கானாப் பொடியையும், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசக் கரைசலில் ஊற்றி ரசத்தை ஒரு கொதி விட்டு இறக்கவும்.