பிறந்த நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள்..!

வியாழன், 2 மார்ச் 2023 (19:10 IST)
பிறந்த நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள்..!
பிறந்தநாளின் போது ஒன்பத்துவேலி வன்மீகநாதா் சுவாமி கோவிலில் சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்ற பகுதி அருகே இருக்கும் ஒன்பத்துவேலி வன்மீகநாதா் கோயிலில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சக்தி வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாள் நட்சத்திரத்தின் போது இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை வாழ்வார்கள் என்றும் நம்பிக்கையாக உள்ளது. ஒன்பத்துவேலி வன்மீகநாதா்வளமான வாழ்வை அருளும் தெய்வம் என்றும் உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையவர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த கடவுளை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் 12 வரை நடை திறந்து இருக்கும் என்றும் இந்த நேரத்தில் சென்று வணங்கலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்