என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

செவ்வாய், 11 மார்ச் 2014 (18:14 IST)
கடைசியில் அந்த பந்தத்தில் சல்மான்கானும் வீழ்ந்துவிட்டார். தனது 48வது வயதில் சல்மான்கானுக்கு கல்யாண ஆசை வந்துள்ளது.
FILE

சல்மான்கான் கத்ரினா கைப், ஐஸ்வர்யாராய் என்று அரை டஜன் காதலிகளை கடந்து வந்துள்ளார். ஆனால் இதுவரை இந்த காதல் விளையாட்டு திருமணம் என்னும் கோலாகவில்லை. சல்மான்கானின் நெருங்கி நண்பர்கள் பலமுறை வற்புறுத்தியும் திருமண விஷயத்தில் விசுவாமித்திரராகவே இருந்து வந்துள்ளார். அவரையும் மயக்க ஒரு மேனகை வந்திருப்பது ஆச்சரியம்.

அவர் ரோமானிய அழகியான லூலியா வந்தூர். சல்மான்கானுடன் அடிக்கடி இவரை பார்க்க முடிகிறது. சமீபத்தில் சல்மான்கான் நண்பர்கள் உணவருந்திய போது லூலியாவையும் அவர்களுடன் இருந்தார். இந்நிலையில் தனது திருமண ஆசையை சல்மான்கான் சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார்.

என் வாழ்க்கை இப்போது திடீரென பிரகாசமடைந்துள்ளது. 15 வயசுக்குப் பிறகு இதுபோன்றதொரு காலகட்டம் எனக்கு இருந்ததில்லை. முதல்முறையாக அனுபவிக்கிறேன் என்று தனது பரவசத்தை பேட்டியொன்றில் வெளிப்படுத்தினார்.
FILE

சல்மானின் தந்தை பதான் சமூகத்தை சேர்ந்தவர். தாய் இந்து. இரண்டாவது அம்மா கிறிஸ்தவர். மைத்துனர் பஞ்சாபி. இந்த வெரைட்டியான பந்தத்தை பட்டியலிட்டவர், என்னுடைய மனைவியை வெளியே இருந்து கொண்டு வர நினைக்கிறேன் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்