ஒண்ணுமே புரியலே உலகத்திலே...

வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (12:59 IST)
ஹன்சிகா நடத்தி வரும் வார்த்தை விளையாட்டுதான் இப்போது nட் நியூஸ்.
FILE

ட்விட்டர் என்ற சாதனத்தை எப்போது பயன்படுத்த ஆரம்பித்தார்களோ அப்போதே வதந்தியின் எண்ணிக்கையும் கூடத்தொடங்கியது. காதலர் தினத்தை சிங்கிளாக கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று ட்வீட் செய்திருந்தார் ஹன்சிகா.

சிங்கிள் என்றால்... ஹன்சிகா இப்போது சிம்புவுடன் இல்லை, அவர்கள் காதல் கட்.
FILE

யுரேகா... சிம்புவும், ஹன்சிகாவும் பிரிஞ்சிட்டாங்க என்று மீடியா கதறியது. இப்போது, என்னுடைய திருமணத்தை அம்மாதான் முடிவு செய்வார்கள். பத்துப் படங்களில் நடித்து வரும் எனக்கு எப்போது திருமணம் நடக்குமோ அப்போது நடக்கும் என்றெல்லாம் சுற்றி வளைத்து இந்த உலகத்துக்கு எதையோ சொல்ல முயன்றிருக்கிறார் ஹன்சிகா.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் சிம்புவுடனான காதல் ஏற்கனவே கயலான் கடைக்கு போட்டு விட்டதாக தெரிகிறது.
FILE

ஃபெப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவில் சிம்புவின் பிறந்தநாளுக்கு விழித்திருந்து பட்டாசு வெடித்து வாழ்த்து சொன்னார் ஹன்சிகா. ஆனால் பதினான்காம் தேதியே நான் சிங்கிள் என்று அறிவித்தார். இப்போது மேரேஜ் மம்மி பார்த்துப்பார் என்கிறார்.

ஆமா, நாங்க காதலிக்கிறnம் என்று சொன்ன மாதிரி இதையும் ஒபனா உடைச்சிட்டா தேவையில்லாம நாங்க சநதிரபாபு பாட்டை பாட வேண்டியிருக்காதே.

வெப்துனியாவைப் படிக்கவும்