வசனகர்த்தாவாக மாறிய விஜய் சேதுபதி

புதன், 12 பிப்ரவரி 2014 (18:07 IST)
FILE
விஜய் சேதுபதிக்குள்ளும் ஒரு இயக்குனர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் எழும்புவதற்கான வெள்ளோட்டம்தான் இந்த வசனகர்த்தா.

இதுவரை நடிப்பை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி முதல்முறையாக மெல்லிசை என்ற படத்தை தயாரிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தப் படத்தை பிஜு விஸ்வநாதன் இயக்குகிறார். இவர் ஒரு இன்டர்நேஷனல் ரோமிங்.

மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஜப்பான் உள்பட உலக மொழிகளில் அரை டஜத்துக்கும் மேல் படங்கள் இயக்கியிருக்கிறார். பல சர்வதேச விருதுகளையும் வாங்கியிருக்கிறாராம். முதல்முறையாக தமிழில் இவர் இயக்குவது மெல்லிசை.

இந்தப் படத்தை தயாரிப்பதுடன் வசனமும் எழுதுகிறார் விஜய் சேதுபதி. மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்