விஜய், முருகதாஸ் படத்தின் கதை

செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (12:38 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம் என்ற கருத்து நிலவியது. ஆனால் முருகதாnல் அந்தக் கருத்து மறுக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கிய அப்படத்தின் ஒன் லைன் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
FILE

விவேக் பானர்ஜி என்ற வங்காளத்தைச் சேர்ந்த சர்வதேச குற்றவாளியைப் பிடிக்க விஜய்யின் உதவியை போலீஸ் நாடுகிறது. விஜய் விவேக்கை பிடிக்கும் போராட்டத்தில் விவேக்குக்கு பலத்த காயம் ஏற்டுகிறது. இப்போது ஜெயிலில் விவேக். தன்னைப் பிடித்த விஜய்யை பழிவாங்க சபதம் செய்ய, பிறகுதான் தெரிகிறது

தன்னைப் பிடித்த விஜய் தான் நினைத்த ஆளில்லை, அவரின் டம்மி என்பது. அதன் பிறகு நடப்பதை சுவாரஸியமாக சொல்கிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கக்கூடும் என்ற செய்தியை இந்த ஒன் லைன் உறுதிப்படுத்துகிறது. சர்வதேச குற்றவாளி வேடத்தில் வங்க நடிகர் Tota Roy Choudhury நடிக்கிறார். இவரை விஜய் துரத்தும் காட்சியை இரவு நேரத்தில் கொல்கத்தாவின் தெருக்களில் முதலில் படமாக்கினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்