ரஜினியை யார் யார் இயக்கப் போகிறார்கள் என்று பேசப்பட்டதோ அவர்கள் எல்லாம் அஜித் படத்தை இயக்கயிருப்பதாக புதிய செய்திகள் வருகின்றன.
FILE
கோச்சடையான் படத்துக்குப் பிறகு ரஜினி யார் படத்தில் நடிக்கிறார் என்பது பெரிய கேள்விக்குறி. ரஜினியின் புதிய படத்தை இயக்குகிறார் என கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த், ஷங்கர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. கே.எஸ்.ரவிக்குமார் என்னுடைய அடுத்தப் படத்தில் ரஜினி கிடையாது என ரேஸிலிருந்து ஒதுங்கினார். கே.வி.ஆனந்த் உள்ளே வெளியே ஆடிக்கொண்டிருக்கிறாரே தவிர ரவிக்குமார் மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பதிலை இன்றுவரை அளிக்கவில்லை. நடுவில் ஷங்கரின் பெயரையும் இழுத்துவிட்டனர்.
ஆனால் இவர்களில் யாரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ரஜினியின் உடல்நிலை சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் தேறினாலும் முன்பு போல் ஓடியாடி நடிப்பது இனி சாத்தியமில்லை. சண்டைக் காட்சிகளில் மட்டுமில்லாமல் நடனக் காட்சியிலும் முன்பு போல் நடிக்கக் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கோச்சடையான் மாதிரியான படங்களை மட்டுமே அவரால் செய்ய முடியும் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். அந்த மாதிரி தமிழில் எடுக்கக் கூடிய திறமை ஷங்கருக்கு மட்டுமே உள்ளது. ஆக, ரஜினி வரலாற்றுப் படங்களில் நடிக்க இருக்கிறார், ஆக்சன் காட்சியில் தூள் கிளப்ப இருக்கிறார் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகள்.
FILE
இதன் காரணமாகவே கே.வி.ஆனந்த், ஷங்கர் போன்றவர்கள் தங்களின் அடுத்தப் படத்துக்காக ரஜினிக்குப் பதில் அஜித்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். கடந்த இரு தினங்களாக ஷங்கரின் அடுத்தப் படத்தில் அஜித் நடிக்கக்கூடும் என்ற யூகச் செய்தி வலுப்பட்டிருக்கிறது (ஆனால் அவர் ஹித்தியில் ஷாருக்கானை இயக்கயிருக்கிறார் எனவும் கூறுகிறார்கள்).
கே.வி.ஆனந்தும் அனேகனுக்குப் பிறகு அஜித்தை வைத்து இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ஷங்கர், கே.வி.ஆனந்த் போன்ற பிரமாண்ட இயக்குனர்களுக்கு அவர்களின் பட்ஜெட்டுக்கு தகுந்த பிரமாண்ட ஹீரோ தேவைப்படுகிறார்கள். ரஜினியைவிட்டால் அஜித், விஜய் என்றுதான் அவர்கள் நகர வேண்டியிருக்கிறது.
உண்மையைச் சொன்னால் இன்று தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்களின் பஞ்சத்திலிருக்கிறது.