இது கதிர்வேலனின் கார்

செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (13:00 IST)
இது கதிர்வேலனின் காதல் படத்தைப் பார்த்த உதயநிதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு கார் பரிசளித்தார்.
FILE

இந்த கார் பரிசளிப்பை பிரபலமாக்கியவர் அஜீத். வாலி படத்தின் கதையை கேட்ட அஜீத் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கார் ஒன்றை பரிசளித்தார். வாலி வெளியாவதற்கு முன்பே படத்தையும், எஸ்.ஜே.சூர்யாவின் திறமையையும் கணித்து இந்த பரிசை அவர் தந்தார். அதன் பிறகு பலருக்கும் அவர் கார் பரிசளித்துள்ளார். பிறகு வேறு சில நடிகர்களும்.

ஒரு படத்தில் இதனை சத்யராஜ் கிண்டலும் செய்திருப்பார். ஆள் நல்ல திறமையா இருக்கான். இவனுக்கு ஒரு கார் பிரசன்ட் பண்ணி ஆளை கவுத்திர வேண்டியதுதான் என்பதாக அவர் டயலாக் பேசும் காட்சி வரும்.

கார் பரிசளிப்புக்குப் பின்னால் இப்படியொரு கார் கலாச்சாரம் இருப்பதை நினைவூட்டவே இந்த பிளாஷ்பேக்.

இது கதிர்வேலனின் காதல் நன்றாக வந்திருப்பதால் இயக்குனரை பாராட்டி டொயோட்டா இன்னோவா காரை பரிசளித்துள்ளார். இந்த பரிசை நான் எதிர்பார்க்கலை என்றார் பிரபாகரன் நெகிழ்ச்சியாக.

ஆனால் பிரபாகரனுக்கு கிடைத்திருக்கும் நிஜமான பரிசு அதுவல்ல. தனது மூன்றாவது படத்தையும் அவர் ரெட் ஜெயண்டுக்காகவே இயக்குகிறார். ஆனால் இதில் உதயநிதி நடிக்கப் போவதில்லையாம். அனேகமாக சிவ கார்த்திகேயன் நடிக்கலாம் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்