நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை செய்த ர‌ஜினிகாந்த்

வெள்ளி, 24 ஜனவரி 2014 (15:00 IST)
FILE
சமீபமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமலிருக்கிறார் ர‌ஜினி. கே.எஸ்.ரவிக்குமாருக்கு நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்துக்கு வருவார் என எதிர்பார்த்தனர். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வீட்டிலிருந்தே வாழ்த்தை சொல்லி விழாவுக்கு வருவதை தவிர்த்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை த‌ரிசிக்க திருப்பதி வந்தார் ர‌ஜினி.

அவருடன் அவரது இளைய மகள் சௌந்தர்யாவும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நேற்றிரவு விஐபி-களுக்கான ஸ்பெஷல் த‌ரிசனத்தை முடித்துக் கொண்டவர் வெளியேவந்த பிறகு நிருபர்களிடம் நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக தெ‌ரிவித்தார்.

படம் ஆரம்பிக்கும் முன்பும், படம் வெளியாகும் முன்பும் திருப்பதி வெங்கடாசலபதி த‌ரிசிப்பது ர‌‌ஜினியின் வழக்கம். சௌந்தர்யா இயக்கத்தில் ர‌ஜினி நடித்திருக்கும் கோச்சடையானை வெளியிடும் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்